Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க மனு சி.பி.எம் கட்சி கூட்டத்தில் முடிவு

நவம்பர் 14, 2023 12:35

குமாரபாளையம்: பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் அருவங்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது.

அருவங்காடு ஜவுளி பூங்காவில் இருந்து வெளிவரும் கழிவுநீர் அனைத்தும் அருவங்காடு ஓடையில் சென்று கலக்கிறது.

மேலும் ஓடை அருகே செயல்பட்டு வரும் இரண்டு  சாயப்பட்டறைகளில் இருந்து வரும் சாயகழிவு தண்ணீர் மேற்கண்ட ஓடையில் சென்று கலக்கிறது. 

இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, சாயக்கழிவு, சாக்கடை கழிவுநீர் ஆகியவை ஓடையில் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதில்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது என்றும் அருவங்காடு பள்ளியில் இருந்து ஓடை வரை சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மனு அளிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தலைப்புச்செய்திகள்